...

3 views

ஸோஹம்
எவ்வளவோ
நுரை வரும் அளவு
திரும்பத்திரும்ப
சோப்புப் போட்டு கழுவினாலும்
போக மறுக்கிறது
முகத்தில்
சோ‌ஹத்தின் அடையாளம்

சட்டென்று குறைந்து விடுகிறது முகத்தின் பிரகாஸம்

கண்மை இடாமலேயே
கண்களைச் சுற்றிப்
பூத்து விடுகின்றன
கருவளையங்கள்

சிரித்து நடிக்க
முயற்சித்தால் கூட
உதட்டோரங்கள்
கீழ்நோக்கி வளைந்து
காட்டிக் கொடுக்கின்றன

அருகிலிருப்பவரிடமிருந்து
ஆறுதலாய் ஒரு வார்த்தை
வந்து விட்டால் கூட
கண்ணீர் சிந்தத் தயாராக இருக்கின்றன விழிகள்
© iAmRangz