![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/normal/horror.webp)
1 views
எதுவும் நிரந்தரமில்லை
ஆயிரம் பேர் ஆசீர்வதித்தாலும்
இருவர் வாழ்வு நிரந்தரமா என்ன
இறப்பின் பின் அழுகை
ஓரிரு நாள்தானே
கூடிய சுற்றமெல்லாம்
கூடி சிரிக்கவும்
கூடாததை பேசவுந்தானே
நாலுபேர் சேர்ந்து பிணப்பெட்டி எடுத்தாலென்ன
அவர்க்கும் இதே கதிதான்
என்பதை அறியாதவரா என்ன
வைத்தியர் என்ன
ஆங்கில மருத்துவர் என்ன நாள்குறிப்பை அவருக்காக
தள்ளியா வைக்கமுடியும்
கடவுளை கொண்டாடும் பூசாரியென்ன பக்தனென்ன
உயிரை காக்கவா முடியும்
நாத்திகனென்ன நல்லவனென்ன நாள்பட்டு வாழ்ந்திடவா முடியும்
நடப்பது என்னவோ நடந்துகொண்டுதான் இருக்கும்
உன் நடத்தைதான்
உன்னை யுகங்கடந்து பேசவைக்கும்
© MASILAMANI(Mass)(yamee)
இருவர் வாழ்வு நிரந்தரமா என்ன
இறப்பின் பின் அழுகை
ஓரிரு நாள்தானே
கூடிய சுற்றமெல்லாம்
கூடி சிரிக்கவும்
கூடாததை பேசவுந்தானே
நாலுபேர் சேர்ந்து பிணப்பெட்டி எடுத்தாலென்ன
அவர்க்கும் இதே கதிதான்
என்பதை அறியாதவரா என்ன
வைத்தியர் என்ன
ஆங்கில மருத்துவர் என்ன நாள்குறிப்பை அவருக்காக
தள்ளியா வைக்கமுடியும்
கடவுளை கொண்டாடும் பூசாரியென்ன பக்தனென்ன
உயிரை காக்கவா முடியும்
நாத்திகனென்ன நல்லவனென்ன நாள்பட்டு வாழ்ந்திடவா முடியும்
நடப்பது என்னவோ நடந்துகொண்டுதான் இருக்கும்
உன் நடத்தைதான்
உன்னை யுகங்கடந்து பேசவைக்கும்
© MASILAMANI(Mass)(yamee)
Related Stories
0 Likes
0
Comments
0 Likes
0
Comments